
இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

ஞாயிறு, 21 நவம்பர், 2010
கவிஞர் அருணாசெல்வம்
விரைவாகச் சென்றதுமேன்?
விரைவாகச் சென்றதுமேன்? விண்ணுலகம் என்று
மறைவாக உண்டெனக் காட்ட - மறைந்து
நிறைவாகச் சென்றாயோ! நீர்குமிழ் வாழ்வைக்
குறையாக்கிச் சென்றாய்! கொடிது!
கொடிதெனும் வாழ்வைக் குடிகள், மிகவும்
நெடிதென்றே எண்ணாமல் நெஞ்சம் - துடிக்கும்
நொடியெல்லாம் நன்மையாய் வாழ்ந்ததைக் காட்டிக்
கடிதாகப் போனாய் கடந்து!
கடந்த தடங்களைக் காவியமாய்ச் செய்து
நடந்து திடமாகப் போனாய்! – சுடராய்ப்
படர்ந்து ஒளிவீசும் பண்பை நினைந்து
தொடர்ந்து பெருகும் துயர்!
துயர்கொண்ட வாழ்வு! துணையை இழந்த
பயங்கொண்ட நன்மனையாள்! பண்பால் - உயர்ந்த
மனங்கொண்ட நன்மக்கள் உள்ளம் அழுது
கனங்கொண்ட வன்சுமையைக் காண்!
பொன்னகை வாங்கிப் பொலிவுடன் போடாமல்
வன்னகை வாய்திறந்து பேசாமல் - மின்னிடும்
புன்னகை பூமுகத்திற் போதுமென்று கண்மூடி
விண்ணுலகைத் தொட்டாய் விரைந்து!
12.11.2010
விரைவாகச் சென்றதுமேன்? விண்ணுலகம் என்று
மறைவாக உண்டெனக் காட்ட - மறைந்து
நிறைவாகச் சென்றாயோ! நீர்குமிழ் வாழ்வைக்
குறையாக்கிச் சென்றாய்! கொடிது!
கொடிதெனும் வாழ்வைக் குடிகள், மிகவும்
நெடிதென்றே எண்ணாமல் நெஞ்சம் - துடிக்கும்
நொடியெல்லாம் நன்மையாய் வாழ்ந்ததைக் காட்டிக்
கடிதாகப் போனாய் கடந்து!

நடந்து திடமாகப் போனாய்! – சுடராய்ப்
படர்ந்து ஒளிவீசும் பண்பை நினைந்து
தொடர்ந்து பெருகும் துயர்!
துயர்கொண்ட வாழ்வு! துணையை இழந்த
பயங்கொண்ட நன்மனையாள்! பண்பால் - உயர்ந்த
மனங்கொண்ட நன்மக்கள் உள்ளம் அழுது
கனங்கொண்ட வன்சுமையைக் காண்!
பொன்னகை வாங்கிப் பொலிவுடன் போடாமல்
வன்னகை வாய்திறந்து பேசாமல் - மின்னிடும்
புன்னகை பூமுகத்திற் போதுமென்று கண்மூடி
விண்ணுலகைத் தொட்டாய் விரைந்து!
12.11.2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக