வெள்ளி, 3 டிசம்பர், 2010

பாரிசு பார்த்தசாரதி!

புகழ் நிலைத்திருக்கும்

அமைதியான உருகொண்டு
அன்பான உளம்கொண்டு
இமைபோன்று செயல்கொண்டு
இனியதமிழ் நெறிகொண்டு
தமைத்தந்து தமிழ்காத்த
தனிப்புகழ்சேர் சிமோன்யூபர்ட்
நமைவிட்டுப் பிரிந்தாரே!
நம்முள்ளம் வாடுதம்மா!

காலங்கள் வென்றுநிற்கும்
கம்பனுக்கு உழைத்திட்டார்!
ஞாலம்உள வரையில்அவர் 
நறும்பணிகள் நினைவிருக்கும்!
பலமான போர்த்துறையில்
பணியாற்றிச் செவாலியே
நலமான விருதுபெற்றார்!
நன்றேசீர் நிலைத்திருக்கும்!

போராடும் வாழ்வினிலே
புகழ்பெற்றார் மிகச்சிலரே!
தீராத தமிழ்ப்பற்றுச்
சிமோனும் அதில்ஒருவர்!
ஆராத துயர்பெருகும்
ஆறுதலும் ஏதய்யா?
ஊரே!நல் உறவே!நம்
உத்தமரின் பேர்காப்போம்!

0 உங்கள் எண்ணங்கள்: