சனி, 20 நவம்பர், 2010

கவிஞர் வண்ணைதெய்வம்

இதய அஞ்சலி

நண்பரே! தமிழ் அன்பரே!!
நாம் தமிழ் பொழியும் அரங்கங்களில்தான் அதிகம் சந்திப்போம்!

தேர் போல நீர் நடந்துவரும் அழகு! – தமிழ்
வேராக இருந்து அரங்கங்களை நடாத்துகின்ற சிறப்பு!

புல் நுனியும் கசங்காமல் மெல்ல நடப்பீரே! – சொல்லும்
சொல்லெதிலும் வல்லினத்தைக் கலக்காமல் கதைப்பீரே!

நல்லவர்கள் அதிககாலம் வாழ்வதைப் பொறுக்காமல்தான்
பொல்லாத காலனவன் உமை அவசரமாய் அழைத்தானோ?

கண்கள் கசிகின்றன! இதயம் கனக்கின்றது!!
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

0 உங்கள் எண்ணங்கள்: