வெள்ளி, 3 டிசம்பர், 2010

சு. மதிவாணன்

பெரும் மதிப்பிற்குரிய கம்பன் கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்

செவாலியே சிமோன் யூபர்ட் அவர்களின் மறைவு நம்முடைய கம்பன் குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத பெரிய இழப்பு!

31.11.2010 அன்று நடந்த கம்பன் விழாவில் மிகவும் சிறப்பாக வரவேற்புரையை அளித்தார்கள்.  யாராலும் என்றென்றம் மறக்க முடியாத அன்பு உள்ளம் கொண்ட மாமனிதர். பொறுமையின் சிகரம். நிதானமாகப் பேசக் கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். அனைவரையும் அன்ப உள்ளம் கொண்டு பார்ப்பவர்.

ஒரு மாதத்திற்கு முன்பாகத் தொலைப்பேசியில் அவருடன் 30 நிமிடங்கள் பேசினேன். அப்பொழுது சொன்ன ஒரு நல்ல கருத்து! 1000க்கு மேற்பட்ட நல்ல உள்ளம் கொண்ட மாணவர்களை அவர் உருவாக்கியுள்ளார் என்பதைக் கேட்டு வியப்புற்றேன்.

ஐயாவின் முகத்தைப் பார்க்கும்போது சிரித்துக்கொண்டே இறைவனிடம் சென்றுள்ளார்கள்.  அமைதியின் உருவமாகச் சென்றுள்ளர்கள். அவர்கள் அணிந்துள்ள கம்பீரமான உடையும், அழகுத் தோற்றமும், மனத்தைக் கவர்ந்து இழுக்கின்றது. பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் உள்ளது.

சிமோன் ஐயா குடும்பத்திற்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒன்று கூடி அதிக அன்பினையும் பாசத்தையும் கொடுக்க வேண்டும்.

என்றும் பணிவாக
சு. மதிவாணன்

0 உங்கள் எண்ணங்கள்: