
இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

வியாழன், 2 டிசம்பர், 2010
தணிகா சமரசம்
பாடுவோம் உன் புகழை!
கம்பனைத்தேடும் இடத்திலே
நம்பினேன் உன்னைத் துணையாக
தும்பின நேரத்தில் மறைந்தாயே!
விம்பினேன் காணாமல் உன்னை!
காந்த விழிகள் எங்கே
சாந்தம் தவழும் முகத்திலே!
மடிந்ததே ஞானப்புன்னகை
நனைந்ததே எங்கள் கண்கள் !
சாதி மல்லிகைப் புன்னகையில்
பாதி மட்டும் பூமியில் நிறுத்தி
நீதியைப் பற்றி எண்ணாமல்
மீதியை எடுத்துப் பறந்தாயே !
காடு மேடு பள்ளம் தாண்டி
இரவு பகல் தூக்கமின்றிப்
பெருமை சிறுமை பாராமல்
உழைத்தாய்க் கம்பன் புகழ்ப்பாட!
தேவர் உலகிற்குச் சென்றபோதும்
போற்றிடுவோம் பூமியில் உன் செயலை!
காத்திடுவோம் உன் தமிழ்த் தொண்டை!
ஏற்றிடுவோம் உன் புகழ் விளக்கை!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக