வெள்ளி, 3 டிசம்பர், 2010

பெஞ்சமின் லெபோ

பொன்றாப் புகழில் ஒன்றிப் போனவர்

கண்ணில்நீர்!   
என்றன்
கருத்தில்?   
வேறியார்?
விண்ணில்      
குடிபுகுந்     
தாலும்     
நெஞ்சம்
தன்னில்       
நிலைத்துவிட்ட 
சிமோன்ஐயா
அவர்களே!
எண்ணிப்       
பார்க்கிறேன்
ஏக்கத்துடன்
அவர்தம்
அணைப்பிலே 
அன்பு
இருக்கும்
 பாசப்
பிணைப்பிலே               
பரிவு
பதமாக 
இறுக்கும்!
பார்வையிலே   
அருள்ஓளி   
பிறக்கும்
பேச்சுக்
கோர்வையிலே   
கன்னித்தமிழ்
கன்னலாய்ச்  
சிறக்கும்!
நண்பனாய்,       
மந்திரியாய்
நல்லா     
சிரியனுமாய்ப்
பண்பிலே        
தெய்வமாய்ப்  
பார்வையிலே
சேவகனாய்
எனக்கமைந்த   
நண்பரை     
இனிஎன்று  
காண்பனோஎனக்
குமைந்தழுது   
கொண்டிருந்தேன்
குமுறிய
மனத்துடன்.
பதமான       
கையொன்றுஎன்
முதுகைப்  
பாசமுடன்    
இதமாகத்      
தடவியது.    
இடுங்கியஎன்
கண்முன்னால்
குனித்த       
புருவமும்;     
செவ்வாயில்  
குமிண்சிரிப்பும்
பனித்த      
சடையும்      
பால்போல்   
திருமுகமும்
இனித்தமுடன்   
என்னெதிரே    
எம்பெருமான் 
இயேசு!
'என்னில்      
விசுவாசம்     
கொள்பவர்   
இறப்பினும்
என்றும்        
வாழ்வார்"     
என்றுநான்
உண்மையாய்
அன்றே          
உரைத்தேனே!  
அறிவாயே
நீயே!
உண்மையாய்  
உண்மையாய்   
உனக்குச்   
சொல்லுகிறேன்
நண்பர்சிமோன் 
என்னில்        
விசுவாசம்   
கண்டார்
விண்ணுலகில்  
என்னோடு      
இணைந்து   
கொண்டார்!
இன்னும்      
உனக்குஏன்    
வருத்தம்?  
தேறுவாய்"
என்றெனக்கு   
இயேசு        
சொல்லி    
முடிக்குமுன்
இன்னொருவர்  
வந்துநின்றார்    
இங்கே     
பாரென்றார்!
'வையத்துள்    
வாழ்வாங்கு    
வாழ்பவர்    
வானுறையும்
தெய்வத்துள்   
வைக்கப்படுவார் 
அல்லரா!    
அப்பனே,
கைக்கொண்ட  
சோகத்தைக்    
கைகழுவி  
விடு"என
மெய்ப்பொருளை
உணர்த்தியவர்  
தெய்வப்     
புலவரேதாம்!
'சீரியதோர்    
ஓட்டப்        
பந்தயத்தில்   
கலந்துகொண்ட
நேரிய       
நெஞ்சத்தவர்    
சிமோன்     
ஐயா
சிறப்பாகப்    
பந்தயத்தில்    
வெற்றி      
பெற்றார்.
முறையாகப்      
பரிசுமுழுமை
யாகத்       
தரவேண்டி
இறைஅவரைத் 
தம்மிடம்      
அழைத்துக்   
கொண்டார்!
குறைஒன்றும்  
இல்லை       
கலங்காதே   
வீணாகக்
கவலாதே"   
என்றவர்      
பவுலடிகள்    
எனவுணர்ந்தேன்!
அவ்வளவில்      
அடியேன்     
அருகே   
வந்தவர்
அவ்வைப்    
பாட்டியே!     
'அப்பா,      
மகனே!
ஆண்டாண்டு     
தோறும்       
அழுது   
புரண்டாலும்
மாண்டோர்   
வருவரோ?"    
அவ்வை     
சொன்ன
ஆறுதல்     
கேட்டே       
தேறுதல்     
பெற்றேன்.
வேறியார்   
வருவரோஎன
விருப்புடன்         
நோக்க    
முறுக்கு         
மீசை
முண்டாசுக்          
கவிஞர்
சரக்சரக்  
கெனத்     
தோன்றிக்           
கூவினார்:  
'காலா      
ஊனைச்சிறு
புல்லென           
மதிக்கிறேன்
காலருகே        
வாடா
சற்றேஉனை         
மிதிக்கிறேன்.
எங்கள்   
சிமோனைக்  
கவர்ந்ததெப்படி?      
பார்க்கிறேன் !
இங்கே   
வாடாஉன்   
கணக்கைத்         
தீர்க்கிறேன்!"
குறுக்கே  
புகுந்து      
விரைந்தோடி       
வந்தார்
நறுக்கு            
மீசைக்      
கவிஞர்  
பாவேந்தர்
'தமிழுக்குத்
தொண்டு    
செய்வோர்          
சாவதில்லை
தமிழ்த்தொண்டர்
சிமோன்தான்
இங்கே          
செத்ததுண்டோ!"
உளமாரக் 
கவிஞர்தம் 
உரைகேட்ட           
காலனும்
'களவாடிச் 
செல்லவில்லை@
கடும்பணிகள்       
பலசெய்ய
விண்ணுலகுக்கு
விருந்தினராய்
விரைந்தழைத்     
துச்சென்றேன்
மண்ணுலகில்    
அவர்புகழ்
மங்கா           
திருக்கும்"
என்றுரைத்தான்.   
சரியென
ஏற்றேன்.          
நண்பர்
என்றென்றும்     
நம்மோடு    
இருக்கின்
றாரே!
பொன்றாதவர் 
புகழென்று   
புரிந்து        
கொண்டனென்!

0 உங்கள் எண்ணங்கள்: