வியாழன், 2 டிசம்பர், 2010

பாண்டுரங்கன்

அன்பு மழையே

நெஞ்சில் நிறைந்தவரே!
நீள்துயில் கொண்டவரே!

இன்பம் நிறைந்தாய் நீ!
இல்லில் சிறந்தாய் நீ!
அன்பில் நனைந்தாய் நீ!
ஆருயிரில் கலந்தாய் நீ!

கண்ணியம் காத்தாய் நீ!
கடமை புரிந்தாய் நீ!
எண்ணும் செயலெல்லாம்
ஏற்றமுற கண்டாய் நீ!

நேர்மையின் நிறைவிடம் நீ!
நெறிநின்ற வாய்மையும் நீ!
மென்மையின் உள்ளொளி நீ!
மேன்மையின் இருப்பும் நீ!

மண்ணின் மாண்பும் நீ!
மனமெல்லாம்  நிறைந்தாய் நீ!
விண்ணில் மலர்ந்தாய் நீ
விழிகளில் கலந்தாய் நீ!

என்விழிகள் பனித்தனவே!
உன் அன்பு மழையிலே!
என் நெஞ்சம் கனத்ததுவே!
உன்னைப் பிரிந்த வினாடியிலே!

0 உங்கள் எண்ணங்கள்: