வெள்ளி, 3 டிசம்பர், 2010

ரூபா (மருமகள்)

எல்லாமாகக் காத்திருப்பீர்!

இன்னும் நினைவில் நிற்குதே!
அன்பர் உன்தன் எழில்முகமே!
                                                                (இன்னும்)

ஆண்டுகள் பல எம்மோடு கழித்தீரே!
இன்பம் பல எம்மோடு பகிர்ந்தீரே!
அன்பும் மகிழ்வும் கொடுத்து எங்கள்
நினைவில் நீங்கா இடம் பிடித்தீரே!
                                                                 (இன்னும்)

நினைவின் வழி பயணம் செய்கிறோம்!
இன்னும் உம்மோடு நினைவில் வாழ்கிறோம்!
இன்று உம்மை இறையில் நிறுத்தி
எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்!
                                                                (இன்னும்)

உம்முடல் மண்ணில் மடியுதே!
உம்முயிர் விண்ணை அடையுதே!
தந்தை ஏசுவும் ஏசுவில் நீவீரும்
எல்லாமாகக் காத்திருப்பீரே - எமக்காக
                                                              (இன்னும்)

0 உங்கள் எண்ணங்கள்: